#BREAKING || இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு.!  - Seithipunal
Seithipunal


இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் பேருந்து கட்டணங்களின் விலை உயர்வும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டு மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று தலைநகர் கொழும்புவில் போராட்டம் கடுமையாக நடந்து வருகிறது. மேலும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் கல்வீச்சு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், இலங்கை, கேகாலை மாவட்டம், ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SriLanka Protests Gun Fire


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->