பூமியை தாக்கும் அதீத சூரிய புயல்.. செல்போன் சேவைகள் பாதிக்க வாய்ப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
Solar Tsunami attack Earth
சூரியனில் வெப்பப் பேரலை நிகழ்வு ஏற்பட்டதன் எதிரொலியால் ஓரிரு நாட்களில் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சூரிய துகள்களில் ஏற்பட்ட வெடிப்பால் அதிவேக சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியானது. இது புவிபரப்பின் வளிமண்டலத்தை தாக்கி வரும் 31 ஆம் தேதி சூரிய புயலாக உருவெடுக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உலகம் முழுவதும் ஜி.பி.எஸ். மற்றும் செல்போன் சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. விண்வெளியில் உள்ள செயற்கைகோள்களையும் இந்த சூரிய பேரலைகள் செயலிழக்க செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆபத்தான கதிர்வீச்சு விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், மின் வழிதடங்களில் திடீர் உயர் மின் அழுத்த மாறுபாடு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
English Summary
Solar Tsunami attack Earth