ரோந்து பணிக்குச் சென்ற போலீசார்.!! 6 பேர் சுட்டுக் கொலை.!
six police officers kill in pakisthan
ரோந்து பணிக்குச் சென்ற போலீசார்.!! 6 பேர் சுட்டுக் கொலை.!
பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாபராபாத் பகுதியில் சமீப நாட்களாக வழிப்பறி மற்றும் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜாபராபாத் பகுதியில் சந்தேகப்படும் விதமாக மர்ம நபர்கள் சுற்றி திரிந்தனர்.
இதைப்பார்த்த போலீசார் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக போலீசாருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில், மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை சரமாரியாக சுட்டு தள்ளினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 6 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த சமத்துவ குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், ஜாபராபாத் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
six police officers kill in pakisthan