ஒடிசாவின் பெருமையும், கண்ணியமும் அழிக்கப்படுகிறது... - பரபரப்பு கிளப்பிய பிரதமர்.!
PM Modi says Odisha destroyed
ஒடிசா மாநிலத்தில் வருகின்ற மே 13ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நாலு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வாக்கு பதிவு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வருகின்ற ஜூன் நான்காம் தேதி வெளியாகும். இந்நிலையில் ஒடிசாவிற்கு சேவை செய்ய பா.ஜ.க கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் ஒடிசாவின் பெருமையும் கண்ணியமும் அளிக்கப்பட்டு வருவதாகவும் மாநிலத்திற்கு சேவை செய்ய பா.ஜ.கவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்க்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பிரச்சனைகளின் அடிப்படையில் மத்தியில் பிஜேடி எங்களுக்கு ஆதரவளித்துள்ளது. பல கட்சிகளும் எங்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளது.
ஒடிசா மற்றும் ஒடியா மொழியில் பெருமை ஆபத்தில் இருக்கிறது. மக்கள் இதை நீண்ட காலம் பொறுத்துக் கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை. ஒரிசாவில் ஏராளமான வளங்கள் இருக்கிறது.
அது இன்று நாட்டின் பணக்கார மாநிலமாக மாறி இருக்கலாம். ஒடிசாவை பணக்கார மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆசை ஒவ்வொரு ஒடிசா மக்களுக்கும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi says Odisha destroyed