ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே, நாரா என்ற நகரத்தில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஷின்சோ பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் அபேவின் முதுகுபக்கம் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்த ஷின்சோ அபேவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் ஷின்சோ அபேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஷின்சோ அபே 2012 முதல் 2020 வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shooting in ex Prime Minister of Japan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->