டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


டென்மார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.

நேற்று வார இறுதி நாள் என்பதால் வணிக வளாகத்தில் அதிகமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.

இதையடுத்து வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சிடைந்த நிலையில் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிய நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகுச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவரிடம் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shooting in Denmark shopping complex


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->