பாகிஸ்தானில் ஹிந்து பெண் மற்றும் குழந்தையை கடத்தி சென்றுள்ள மர்ம நபர்களால் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரின் ஷேர் ஷா பகுதியிலுள்ள சிந்தி மொஹல்லாவில் ஹிந்து குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீட்டில் பெண் ஒருவரும், அவரது ஒன்றரை வயது மகளும் இருந்துள்ளனர்.

சம்பவ தினமான டிசம்பர் 06-ஆம் தேதியன்று, அவர்களது வீட்டிற்கு ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. அப்போது வீட்டிலிருந்த பெண், அவரது குழந்தையை காரில் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

குறித்த புகாரில் வீட்டிலிருந்து வெளிய சென்ற பெண் மற்றும் குழந்தை இருவரையும் மர்ம நபர்கள், வெளியே நின்றிருந்த வெள்ளை நிற ஆல்டோ காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocked by mysterious people who kidnapped a Hindu woman and child in Pakistan


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->