இந்தியாவை தொடர்ந்து உலக நாடுகளின் தடையை மீறி செயல்படும் இலங்கை.? - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எரிபொருளுக்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி செல்கின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதால், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உக்ரைன் பிரச்சினையில் மற்ற மேற்கு ஆசிய நாடுகளைப் போல நடுநிலை வகித்து வரும் இலங்கை ரஷ்யாவிடமிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு 99 ஆயிரம் டன் கச்சா எண்ணை வாங்கியது.

இந்நிலையில், மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்க தயாராக உள்ளது. இது குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இலங்கைக்கு எரிபொருள் தேவை அதிகமாக உள்ளது. வழக்கமாக வாங்கும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயும், நிலக்கரியும் வாங்க முயன்று வருகிறோம். வேறு எங்காவது கிடைத்தாலும் வாங்குவோம். இல்லாவிட்டால் மீண்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணை வாங்குவோம்.  தனியாரிடம் கச்சா எண்ணெய் வாங்க எங்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாங்களே உருவாக்கிக் கொண்டது தான். காய்கறி விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. நெல் சாகுபடியும் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. நான் இதற்கு முன்பு அரசாங்கத்தில் இருந்த போது எல்லாம், மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதையும், வருமானம் உயருவதையும் உறுதி செய்து உள்ளேன். ஆனால் இப்போது மக்கள் படும் வேதனையை ஒரு குடிமகனாகவும், பிரதமராகும் அச்சத்துடன் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranil eickremesinghe says russian oil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->