ம.பியில் பயங்கரம் || உடன்பிறப்புகளை காதலர்கள் என்று நினைத்து வெளுத்துக் கட்டிய மக்கள்.!
public peoples attack brother sister in madhya pradesh
ம.பியில் பயங்கரம் || உடன்பிறப்புகளை காதலர்கள் என்று நினைத்து வெளுத்துக் கட்டிய மக்கள்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டம் சடாய் சாலையில் கோவில் அருகே உள்ள தெருவோர கடையில் அதுல் சவுத்ரி மற்றும் அவருடைய சகோதரி இருவரும் நின்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த உள்ளூர்வாசிகள் சிலர் அவர்கள் இருவரையும் காதலர்கள் என்று தவறுதலாக நினைத்து அடித்து, தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் சகோதரர், சகோதரிகளுக்கான ரக்சா பந்தன் பண்டிகையின்போது அதாவது ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த வீடியோவில், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் பஜ்ரங் தளம் என்ற இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து செய்து வருகின்றனர்.
English Summary
public peoples attack brother sister in madhya pradesh