மோடியை கிண்டல் செய்த பிரியங்கா காந்தி.! நடந்தது என்ன?
Priyanka Gandhi teased Modi in rajasthan
ராஜஸ்தான் மாநிலம் சக்வாடாவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசியதாவது:-
பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் வலுவிழந்துவிட்டது. தற்ப்பொழுதுது முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் யாரும் இல்லை. பிரதமர், மாநிலமுழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். இதை பார்க்கும்பொழுது பாஜக தனது முதலமைச்சர் வேட்ப்பாளரை தேடிக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
பொதுமக்களிடம் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தி அரசியல் செய்பவர்களிடம் மக்கள் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். விவசாயிகள் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
வரும் 25ம் தேதி 200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் தற்போழுது காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்துவருகிறது. இந்தநிலையில் வரும் தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க அக்கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Priyanka Gandhi teased Modi in rajasthan