நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து.. 4000 சொகுசு கார்கள் எரிந்து சாம்பல்.! - Seithipunal
Seithipunal


ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிச்சென்ற கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதிலிருந்த 4000 சொகுசு கார்கள் எரிந்து சாம்பலாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அந்த கப்பலில் தீ மளமளவென பரவி கிட்டத்தட்ட முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

மேலும், இந்த கப்பலில் ஆடி கார் உள்ளிட்ட விலை உயர்ந்த 4000 சொகுசு கார்கள் இருந்ததாகவும் அந்த கார்கள் அனைத்தும் சாம்பலாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த கப்பலில் பணி புரிந்த 22 பணியாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு விட்டதாகவும் கப்பலில் இருந்த பொருட்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Portugal ship fire 4000 luxury cars fire


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->