ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார்! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பர் 22, 23) நடைபெறவுள்ள முதல் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று (நவம்பர் 21, வெள்ளிக்கிழமை) புறப்பட்டுச் சென்றார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற பிரதமர் மோடி, ஜி20 கூட்டத்தில் கலந்துகொள்வதுடன், ஆறாவது ஐபிஎஸ்ஏ (IBSA) உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார். மாநாட்டின் இடையே பல்வேறு உலகத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

மோடியின் தொலைநோக்குப் பார்வை:

ஜி20 உச்சி மாநாட்டின் மூன்று அமர்வுகளில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி, காலநிலை மாற்றம், எரிசக்தி மாற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து உரையாற்றவுள்ளார்.

தென்னாப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்னதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "வசுதைவ குடும்பகம்" மற்றும் "ஒரே உலகம், ஒரே குடும்பம் மற்றும் ஒரே எதிர்காலம்" என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கேற்ப இந்தியாவின் கண்ணோட்டத்தை உச்சிமாநாட்டில் முன்வைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi South Africa first G20 summit


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->