#BREAKING: உச்சகட்ட போர் பதற்றம்!! தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்!! - Seithipunal
Seithipunal


ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையானே தற்போது உட்ச்சகட்டத்தை எட்டியுள்ளது. தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய ராணுவதளங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலில் பல இஸ்ரேலிய தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்ததால் தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியராணுவம் பதிலுக்கு பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் காசாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையை காலி செய்ய உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி வரை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இஸ்ரேல் ராணுவம் அவகாசம் அளித்துள்ளது. காசா பகுதிக்குள் உதவிகள் அனுமதிக்கப்படாவிட்டால், எல்லைக் கடக்கும் வழியாக அமெரிக்கப் பிரஜைகளை வெளியேற்ற எகிப்து அனுமதி மறுத்துள்ளதாக அரேபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா காஸாவில் உள்ள தங்குமிடங்கள் இனி பாதுகாப்பாக இல்லை என தெரிவித்துள்ளது. எல்லையில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. மேலும் இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் தெற்கு லெபனானின் சில பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் உள்ள மருத்துவமனை சேவையில் இல்லை என்று ஜோர்டானிய அதிகாரப்பூர்வ ஊடகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Peak war tension between Israel from South Lebanon


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->