பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு பயங்கரவாத தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் 46 பேர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.  பாகிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள 7 கிராமங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தான் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் உள்ள பயிற்சி நிலையத்தை குறி வைத்து செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக குறித்த தாக்குதல்கள் வந்துள்ளன.

தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தலிபான் அமைப்பு தங்கள் நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த அமைப்பு  பயங்கரவாத அமைப்பு என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

இந்த அமைப்பைக் குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கடந்த செவ்வாய் அன்று  வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்கள் மீது ஆப்கனிஸ்தான் தாலிபான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

தலிபான் படைகள் பாகிஸ்தானில் பல இடங்களை குறிவைத்து தாக்கியதில் 19 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகி உள்ளது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistans Taliban terror attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->