மலைப்பாங்கான இடத்தில் திடீர் நிலச்சரிவு... திரைப்படத்தை மிஞ்சும் அளவு ஏற்பட்ட கோர விபத்து.! - Seithipunal
Seithipunal


பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டி நகரில் இருந்து, அங்குள்ள கில்கிட் பிராந்தியத்திற்கு பேருந்து ஒன்று புறப்பட்டு பயணம் செய்து கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். 

இப்பேருந்து கில்கிட் பிராந்தியத்தின் ரவுண்டோ நகர் பகுதியில் செல்லும் போது, மலைப்பாங்கான பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகியுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

பாறைகள் அடுத்தடுத்து உருண்டு பேருந்தை மொத்தமாக சீர்குலைத்த நிலையில், பேருந்து மொத்தமாக சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேர் சமப்வ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Road Accident peoples died 19 Oct 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->