சிறுமியை கூட்டாக சேர்ந்து மாதக்கணக்கில் சீரழித்த உறவுகள்.. அரங்கேறிய கொடூரம்.!
Pakistan gang Sexual abuse girl police investigation
பாகிஸ்தான் நாட்டில் உள்ள படின் கிராமத்தில் 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரை கும்பலொன்று கடந்த நான்கு மாதமாக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது.
மேலும், சிறுமியிடம் இது குறித்து ஏதேனும் கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இவ்வாறாக பல மாதங்கள் சிறுமியை கூட்டாக சேர்ந்து சீரழித்து வந்த நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
சிறுமி கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து விசாரணை செய்த பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி தகவலாக பலாத்கார விபரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது அவரது உறவினர்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Pakistan gang Sexual abuse girl police investigation