பாகிஸ்தான் போலீஸ் எஸ்.பி.க்கு குறி வைத்த தீவிரவாதிகள்! பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!
Pakistan bomb blast girl and 4 killed
பாகிஸ்தானில் போலீஸ் எஸ்.பி-க்கு குண்டு வைத்து தாக்க முயற்சி செய்ததில், நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் போலீஸ் எஸ்.பி யின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
போலீசாரின் காருக்கு அருகேயே, தீவிரவாதிகள் அவர்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து, அதில் ஐந்து கிலோ வெடி மருந்தை பதுக்கி வைத்து ரிமோட் கண்ட்ரோலின் மூலம் வெடிக்க செய்திருக்கின்றனர்.
இதில் காவல் துறை எஸ் பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அந்த சந்தை பகுதியில் இருந்த காவலர்கள், கார் ஓட்டுநர், சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
15 பேர் உடல் காயம் அடைந்தனர். மேலும் தொடர்ந்து பயங்கரவாதிகளால் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முறை தாக்குதல் ஏற்படுத்தப்பட்டு அதில் நான்கு போலீசார்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Pakistan bomb blast girl and 4 killed