பாகிஸ்தான் போலீஸ் எஸ்.பி.க்கு குறி வைத்த தீவிரவாதிகள்! பரிதாபமாக உயிரிழந்த சிறுமி! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் போலீஸ் எஸ்.பி-க்கு  குண்டு வைத்து தாக்க முயற்சி செய்ததில், நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் போலீஸ் எஸ்.பி யின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. 

போலீசாரின் காருக்கு அருகேயே, தீவிரவாதிகள் அவர்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து, அதில் ஐந்து கிலோ வெடி மருந்தை பதுக்கி வைத்து ரிமோட் கண்ட்ரோலின் மூலம் வெடிக்க செய்திருக்கின்றனர்.

இதில் காவல் துறை எஸ் பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அந்த சந்தை பகுதியில் இருந்த காவலர்கள், கார் ஓட்டுநர்,  சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 

15 பேர் உடல் காயம் அடைந்தனர். மேலும் தொடர்ந்து பயங்கரவாதிகளால் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முறை தாக்குதல் ஏற்படுத்தப்பட்டு அதில் நான்கு போலீசார்கள் உயிரிழந்துள்ளனர். 

இந்நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan bomb blast girl and 4 killed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->