பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு.. 13 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி.!
Pakistan bomb blast 13 employee death
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பத்தில் 13 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வர்ஜிஸ்தான் பகுதியில் ராணுவ சாவடி ஒன்று உள்ளது. இந்த ராணுவ சாவடியில் தொழிலாளர்கள் கட்டுமான பணிகள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீர்னு ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 13 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
என்ன குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள மக்கின் மற்றும் வானா தெஹ்சில் பகுதியை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் சம்பவம் குறித்த முழு விபரங்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Pakistan bomb blast 13 employee death