14 வயது சிறுமி திருமணத்திற்கு மறுத்ததால், பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சார்ந்தவர் முகமது யூசுப். இவரது மகள் சாதியா (வயது 14). இந்த சிறுமியை யூசுபின் சகோதரர் முகமது யாகூப் மகனிற்கு மணமுடிக்க முடிவு செய்து பெண் கேட்டுள்ளார். 

ஆனால், சாதியவை ஏற்கனவே மற்றொரு உறவினருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக முகமது யூசுப் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் தனது மகளை திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த யாகூப், தனது மகனிற்கு பெண் கொடுக்கவில்லை என்றால், வேறு யாருக்கும் அவள் கிடைக்க கூடாது என்று கூறி சிறுமியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளான். 

வீட்டில் ஆட்கள் இல்லாத நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். ஆனால் சிறுமி சிறிது நேரத்திற்குள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தை குடும்பத்தினர் காவல் துறையினரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்த சூழலும், இந்த கொடூர சம்பவம் வெளிவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக யூசுப்பை கைது செய்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan 14 year girl murder due to reject marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->