மெக்சிகோ ரெயில் விபத்து : ஒருவர் பாலி - 22 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் உள்ள போட்ரெரோ மற்றும் லா ராசா ரெயில் நிலையங்களுக்கிடையே ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, நகர மேயர் ஷெயின்பாம் தெரிவித்ததாவது, "ரெயில் விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 22 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஏழு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த ரயில் ஓட்டுனர் ஒருவர் உட்பட நான்கு பேர் ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாகவே மெட்ரோ ரயில்களில் பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. 

இதற்கு முன்பாக கடந்த 2021 இல் மே மாதம் ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவையனைத்தும் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாகவே நடைபெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one man died and twenty two peoples injury for tarin accident in mexico


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->