கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் - வடகொரியா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஓராண்டாக கொரிய எல்லைப் பகுதியில் அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனைகளை செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தென்கொரியா, அமெரிக்காவுடன் கூட்டுப் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகொரியா, கப்பலிருந்து அணுஆயுத ஏவுகணையை வீசி சோதனை செய்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் ஏற்படும் பதற்றத்தை சமாளிக்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா இடையான கூட்டு பயிற்சி வடகொரியா மீதான தாக்குதல் நடவடிக்கை என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மூன்று நாடுகளின் கூட்டுப்போர் பயிற்சியின் போது வடகொரியா எல்லையில் அமெரிக்கா குண்டு வீசும் விமானங்களை பறக்க செய்ததது. இதற்கு வடகொரியா அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடும் அனைத்து நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கொரியா எல்லைப் பகுதியில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக வடகொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea warns of attack on countries participates in joint war exercise


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->