அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிசூடு.! ஒருவர் பலி - நான்கு பேர் காயம்.!
near america man died and four peoples injury for gun shoot
அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கொலராடோ மாகாணத்தில் உள்ள பால்கன் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக எல் பாசோ கவுன்டி ஷெரீப் அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
அந்த தகவலின் படி, ஷெரீப் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐந்து பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மற்றவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து ஷெரீப் அலுவலகம் தெரிவித்ததாவது, "பாயிண்ட் ரெயீஸ் டிரைவ் பகுதியில் எண்ணற்ற துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், கடந்த சனிக்கிழமை பாட்டர் டிரைவ் பகுதியில் நடைபெற்ற கார் கடத்தலுக்கும், இந்த துப்பாக்கி சூட்டிற்கும் தொடர்பு இருக்காது" என்று தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது, அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களிடம் ஏதேனும் புகைப்படங்கள் உள்ளனவா? என்று ஷெரீப் அலுவலகம் கேட்டு கொண்டுள்ளது.
மேலும், ஷெரிப் அலுவலக விசாரணை அதிகாரிகளுடன், கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறை மற்றும் மத்திய புலனாய்வு துறையும் இணைந்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
near america man died and four peoples injury for gun shoot