வானில் பரந்த விமானம்..! வாலிபருக்கு துப்பாக்கிச் சூடு.! நடந்தது என்ன?. - Seithipunal
Seithipunal


மியான்மர் நாட்டில் உள்ள நேசனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திலிருந்து ஏ.டி.ஆர்.-72 ரக விமானத்தில் நைபிடா நகரில் இருந்து லோய்காவ் நோக்கி  27 வயது வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். 

தரையில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த, அந்த விமானத்தில் 63 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் லோய்காவ் நகரை நெருங்கியபோது, திடீரென தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா ஒன்று விமானத்தில் ஊடுருவி வாலிபரின் மீது பாய்ந்து உள்ளது. 

இந்த துப்பாக்கி சூட்டில், அவரது முகத்தின் வலது புறம் காயம் ஏற்பட்டு உள்ள புகைப்படம் வெளிவந்துள்ளது. அந்த படத்தில், விமானம் தோட்டாவால் துளைக்கப்பட்ட மற்றும் காயமடைந்த வாலிபரின் காட்சிகள் ஆகியவை இடம் பெற்று உள்ளன. 

இந்த விமானம் தரையிறங்கியதும் உடனடியாக அந்த வாலிபர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மியான்மர் நாட்டு ராணுவ படைகள் சம்பவம் நடந்த விமான நிலையம் அருகே குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

miyanmar national airlines airport young man gun attack


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->