மெட்ரோ இரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து.. இரயில் பயணிகள் 23 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


மெக்ஸிகோ நகரில் திங்கள்கிழமை இரவு மெட்ரோ இரயில் பாலம் இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரயிலில் பயணம் செய்த பயணிகள் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அங்குள்ள உள்ளூர் நேரப்படி, இரவு 10:22 மணிக்கு விபத்து ஏற்பட்டது. நகரத்தின் புதிய பாதையில், 12 ஆவது வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ இரயில் சேவையில் மெட்ரோ இரயில் சென்று கொண்டிருந்த சமயத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 2017 ஆம் வருடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள பல்வேறு கான்கிரிட் கட்டுமானங்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்த நிலையில், அவ்வாறு பொதுமக்களால் அச்சம் தெரிவிக்கப்பட்ட மெட்ரோ இரயில் பாலத்தில் தற்போது விபத்து நடைபெற்றுள்ள பாலமும் ஒன்று என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mexico Metro Train Bridge Collapse Accident 23 Peoples Died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->