வானில் மூன்று கோள்கள் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு..! - Seithipunal
Seithipunal


சந்திரன், செவ்வாய், வெள்ளி மூன்றும் நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு  வானில் இன்றும், நாளையும் நடைபெறு என அறிவிப்பு..!

வான்வெளியில் அதிசயங்கள் அவ்வப்போது  நிகழ்வதுண்டு. அந்த வகையில் ஒரு அரிய நிகழ்வு ஜூலை 12, 13-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நடக்க உள்ளது. மேற்கு வானில் சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் கழித்து இந்த நிகழ்வை காணலாம்.

குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களுக்கு இடையே 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை வெறும் கண்களால் காணலாம் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர்  செளந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். இது போன்ற அதிசயம் 2019 இல்  இதற்குமுன் நிகழ்ந்தது. ஆனால் அப்போது சூரியன் இரு கோள்களுக்கு மிக அருகில் இருந்ததால் சரியாக காணமுடியவில்லை.

ஆனால், தற்போது இன்றும் நாளையும் நிகழும் இந்த நிகழ்வை வெறும் கண்களாலும் காண முடியும்.  அடுத்ததாக இதுபோன்ற  அரிய நிகழ்வுகள்   மேலும்,  2024 பிப்ரவரி மற்றும் 2034 மே மாதத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mars venus and earth's moon conjugation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->