ஈரானில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு மரண தண்டனை.!
Man Death Penalty for shooting in Iran
ஈரான் நாட்டில் சில காலமாக ஹிஜாப் தடைக்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், பல பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி நிறைய பேர் கைது செய்யப்பட்டுள்ள, நிலையில், நேற்று இரண்டாவதாக ஒரு நபருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.
மேலும், ஈரான் நாட்டில் இசே நகரில் உள்ள பஜாரில் மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட பத்து பேர் காயமடைந்தததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், நேற்று, இசே நகரின் பல்வேறு பகுதிகளில் ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியது மட்டுமல்லாமல், அங்குள்ள காவல்துறையினர் மீது கற்களை வீசினர்.
இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதனால், அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. இதேபோல், கடந்த மாதம் ஒரு புனித ஸ்தலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
Man Death Penalty for shooting in Iran