வடகொரியாவின் ஏவுகணை சோதனை சர்வதேச அமைதியை சீர்குலைக்கிறது - ஜப்பான் - Seithipunal
Seithipunal


ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா இன்று காலை மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை செய்துள்ளது. இந்த மூன்று ஏவுகணைகளும், ஜப்பானின் பொருளாதார மண்டலத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில் விழுந்ததாகவும், இந்த ஏவுகணைகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த சோதனையை அடுத்து ஜப்பானின் போர் விமானங்கள் மற்றும் கடற்படை எச்சரிக்கையாகவும், தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணைகள் சர்வதேச அமைதியை சீர்குலைப்பதாகவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாகவும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Japan says North Korea missile test disrupts international peace


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->