ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 2 பேர் பலி..90 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இரவு என்பதால் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தை தொடர்ந்து அலறியடித்துக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan earthquake 2 person death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->