# இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் : 2 சிரியா வீரர்கள் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2011- ஆண்டு முதல் சிரியா நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் நாட்டின் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரால் நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இருப்பினும், தற்போது வரை இந்த போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டில் உள்ள சனா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சிரியா நாட்டில் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ விமானதளத்தை, இஸ்ரேஸ் ஏவுகணை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியிட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாமல், அந்த பகுதியில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளின் நிலைகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த வான்வழி ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

isrel attack siriya soldiers died


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->