ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்: உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பல நாடுகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந் நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களை அடுத்து, சர்வதேச நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும்,  தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டியது பன்னாட்டு சமூகத்தின் பொறுப்பு என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்றும், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற தவறான குற்றச்சாட்டுகளின் கீழ் ஏன் தாக்கப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிந்ததும், ராணுவத் தாக்குதல்கள் மூலம் சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகளில் குறுக்கிடுவதும் அமெரிக்காதான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையை கண்டிப்பது, தடுப்பது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும் என்றும், இல்லையென்றால், சர்வதேச சட்டத்தில் எதுவும் மிச்சமிருக்காது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரானிய மக்கள் அரசாங்கத்துடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் உள்ளதாகவும், எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக நாங்கள் உறுதியாக நிற்கிறோம். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran Foreign Minister calls on world nations to stop US attack on Iran


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->