இந்தோனேசியா கனமழை: தொடர்ந்து அதிகாரிக்கு பலி எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா, சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியா, சுமத்ரா தீவில் அண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டது. 

இதனால் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் நீரில் மூழ்கின. மேலும் 3 வீடுகள் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 666 வீடுகள் சேதமடைந்துள்ளது. 

பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளது. இந்நிலையில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் இரண்டு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia heavy rain death increase


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->