மழை வெள்ளத்தால் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பேரிடர் மேலாண்மை.. பதறும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா நாட்டில் பருவமழையானது கடுமையாக தீவிரமடைந்துள்ளது. இதனால் பரவலான கனமழை பேசிட்டு வரும் நிலையில்., தாழ்வான பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் தத்தளிக்க துவங்கியுள்ளது. 

அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு., நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய நாட்டில் உள்ள ஜாகர்தா பிராந்தியத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை 23 பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும்., மேலும் பலரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Indonesia flood,

இதன் காரணமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் இருப்பதாக பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. ஜகார்தா பிராந்தியத்தில் ஏராளாமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில்., சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ளனர். 

மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில்., மின்விபத்துக்களை தவிர்ப்பதற்காக மின்னிணைப்புகள் துண்டுகப்ட்டுள்ளதாகவும்., தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளதால் இரயில் பாதைகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில்., தற்போது வரை மொத்தமாக சுமார் 43 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Indonesia flood,

மேலும்., அங்குள்ள ஆறுகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழிவதால் கரைகள் அனைத்தும் உடைந்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் அதிகளவில் புகுந்துள்ளது. இதனால் மீட்பு குழுவினர் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக பல ஆபத்துகள் உள்ள நிலையில்., டைபாய்டு காய்ச்சல்., காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia flood peoples panic for disease spreading


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->