மீண்டும் ஹிந்துக்களுக்கு எதிராக அட்டூழியம்: வங்கதேசத்தில் துர்கா கோவில் சேதப்படுத்தும் காட்சி: இந்தியா கடும் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


வங்கதேசம் (Bangladesh) டாக்காவில் அமைந்துள்ள துர்கா கோவில் ஒன்று கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அங்கு ஹிந்துகளுக்கு பாதுகாப்பு அளிப்பது இடைக்கால அரசின் முக்கிய பொறுப்பு என வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஹிந்துக்களையும், அவர்களின் மதத் தலங்களையும் பாதுகாப்பது இடைக்கால அரசின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அங்கு, சிறுபான்மையினரை குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்கப்படும் சம்பவங்களை கண்டிப்பதாகவும், கோவிலுக்கு பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக, இடைக்கால அரசாங்கம், இன்று கோவிலை சேதப்படுத்த அனுமதித்துள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறித்த துர்கா கோவிலில் உள்ள சிலைகள் சேதமடைந்துள்ளமை மற்றும் இது போன்ற சம்பவங்கள் வங்கதேசத்தில் தொடர்ந்து நடந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

டாக்காவில் உள்ள குறித்த துர்கா கோவிலை ஜே.சி.பி., மூலம் சேதப்படுத்தும், வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனை  பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India strongly condemns the vandalism of a Durga temple in Bangladesh


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->