500-ஐ கடந்த குரங்கு அம்மை வைரஸ்.. அச்சத்தில் உள்ள நாடு.!! - Seithipunal
Seithipunal


குரங்கு அம்மைத் தொற்று கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளதால் உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும், குரங்கு அம்மைத் தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும் உலக சுகாதர அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இங்கிலாந்தில் குரங்கு அம்மை வைரஸ் தொற்று  500-ஐ கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. அங்கு குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

incidence of monkey pox in uk exceeds 500


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->