கிருமி நாசினி தெளிக்க முதியோர்கள் இல்லத்திற்கு சென்ற இராணுவ வீரர்கள்.. கட்டிலில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!
IN SPAIN AGED MENS DIED IN NURSERY HOME AFFECTED CORONA VIRUS
ஸ்பெயின் நாட்டில் கரோனா வைரஸின் காரணமாக 3,647 பேர் உயிரிழந்துள்ளனர். 49,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்க ஸ்பெயின் அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
கரோனா வைரஸ் முதியவர்களை அதிகளவு தாக்கும் என்ற காரணத்தால், அங்குள்ள ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் முதியவர்களின் நிலை குறித்து அறிய இராணுவ வீரர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
கிருமி நாசினி தெளிக்கவும் இராணுவ வீரர்களுக்கு அருவுறுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள மாட்ரிட்டி பகுதியில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்திற்கு இராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.
அங்கு முதியவர்கள் கவனிக்க ஆட்கள் இல்லாது கைவிடப்பட்ட நிலையில், படுக்கையிலேயே இறந்து கிடந்துள்ளார். மேலும், பராமரிப்பாளர்கள் அவர்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள கைவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
எந்த விதமான சிகிச்சையும் இன்றி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர்களில் உயிருடன் இருந்த அன்பர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் வெளியாகி தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
IN SPAIN AGED MENS DIED IN NURSERY HOME AFFECTED CORONA VIRUS