பாலத்தில் உள்ள தூண் மீது மோதி அதிபயங்கர விபத்து... 10 பேர் சம்பவ இடத்திலேயே., 3 பேர் மருத்துவமனையில் பரிதாப பலி..!!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பலநூறு விபத்துகள் ஏற்பட்டு., இதனால் மக்கள் பரிதாபமாக பலியாகி வருவது தொடர்கதையாகியுள்ளது. மனிதனால் கண்டறியப்பட்ட பொருட்களாலும்., சில நேரம் அஜாக்கிரதையாலும் விபத்துகள் அரங்கேறுகிறது. 

அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் இருக்கும் சிகிவா மாநிலத்தில் இருக்கும் டெலிசியாஸ் - சவுஸில்லா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் 50 பயணிகளை ஏற்றி கொண்ட பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த பேருந்தானது அதிவேகத்தில் சென்று கொண்டு இருந்த நிலையில்., அவ்வழியாக வரும் பாலத்தினை நெருங்கிய நேரத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து., பாலத்தின் மீதுள்ள தூணில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. 

நொடிப்பொழுதில் அரங்கேறிய விபத்தில் பக்கவாட்டில் நிலைசாய்ந்து விழுந்த பேருந்தில்., பயணம் செய்த பயணிகளில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., 32 பேர் படுகாயமடைந்து உயிருக்காக போராடி துடித்தனர். 

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் இது குறித்து காவல் துரையினருக்கும்., அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்த 32 பேரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில்., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 3 பேர்  அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico bus accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->