இருமலிற்கு மருத்துவமனை சென்ற முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! மருத்துவமனை நிர்வாகம் அதிரடி.!!
in china old man doctors rescued
முதியவர் ஒருவர் தொடர் இருமலால் அவதியுற்று வந்த நிலையில்., மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்த போது., அவரது தொண்டையில் இருந்த அட்டை பூச்சியை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
சீன நாட்டில் உள்ள 60 வயதாகும் முதியவர் தொடர்ச்சியான இருமலின் காரணமாக கடுமையாக அவதியுற்று வந்துள்ளார். இதனையடுத்து பொறுத்து பார்த்த முதியவர் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று விஷயத்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையில் முதியவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தொண்டையில் இரண்டு அட்டை பூச்சிகள் இருந்துள்ளதை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து முதியவருக்கு உடனைடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் இரண்டு அட்டை பூச்சியையும் அகற்றினர். இப்போது முதியவர் நல்ல நிலையில் உள்ளதாகவும்., குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும்., இது தொடர்பாக முதியவர் தெரிவித்த சமயத்தில்., அங்குள்ள மலைப்பகுதிக்கு சென்று அருவிகளில் நீர் குடித்த சமயத்தில் அட்டைகள் தொண்டையில் சென்றது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in china old man doctors rescued