லாரி கவிழ்ந்து நேருக்கு நேர் மோதி விபத்திக்குள்ளான சோகம்..! பரிதாபமாக துடிதுடித்து பலியான 7 பேர்.!!
in china lorry accident peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் அரங்கேறி., இதனால் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
ஒரு சில இடங்களில் அதிஷ்டத்தின் காரணமாக மக்கள் தப்பித்தாலும்., சில இடங்களில் நடைபெறும் விபத்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சீன நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் இருக்கும் யூனான் மாகாணத்தில் இருக்கும் வென்ஸான் நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரியொன்று சென்று கொண்டு இருந்துள்ளது.
இந்த லாரியானது திடீரென சாலை பாதுகாப்பு சுவரின் மீது திடீரென மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த நேரத்தில்., எதிர்திசையில் வந்த கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையில்., 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரியின் ஓட்டுநர் லோவோ என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in china lorry accident peoples died