தான் வாழ்ந்த இடம் தெரியாது திகைத்துப்போன கோலா கரடி.. மீண்டும் விஸ்வரூபத்தில் காட்டுத்தீ.. வைரலாகும் புகைப்படம்.!!
in Australia Forest fire now started
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் தெற்கு கடற்கரை பகுதிகளில் காட்டுத்தீயின் தீவிர வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற அரசின் சார்பாக உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தின் போது பல்வேறு மாகாணத்தில் காட்டுதீயானது பரவியது. இந்த காட்டுத்தீயின் காரணமாக தற்போது வரை சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் அளவிலான நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பல்வேறு இடங்களில் வறட்சியும் நிலவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு மக்களும் பரிதாபமாக பலியாகினர்.
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் தெற்கு கடற்கரை பகுதியில் காட்டுத்தீ பரவி வெப்பம் அதிகரித்து மக்கள் பெரும் துயருக்கு உள்ளாகினர்.மேலும், அங்கு காட்டுப்பகுதியில் இருந்த விலங்குகள் அனைத்தும் செய்வதறியாது தீயில் சிக்கி கருகி பரிதாபமாக உயிரிழந்தன. பல்வேறு விலங்குகள் தீக்கு இறையாகின. இந்த நேரத்தில் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடியது.
பின்னர் மூன்று மாதங்கள் கழித்து தற்போது குறைந்தளவு பெய்ய துவங்கிய மழையால் காட்டுத்தீ சிறிதளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் தாக்கம் மக்களை பெருமளவு பாதித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், கோலா கரடி தனது வாழ்விடம் முற்றிலும் சிதைக்கப்பட்டு இருப்பதை கண்டு திகைத்து நிற்கும் காட்சியானது நெஞ்சை உலுக்கியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Australia Forest fire now started