தன் குழந்தை இறந்து பல குழந்தைகளுக்கு பாலூட்டி தாயான பெண்மணி..!!
in america mother feed milk for babies since died baby thoughts
அமெரிக்கா நாட்டில் உள்ள விஸ்கொன்ஸின் மாகாணத்தை சார்ந்த பெண்ணின் பெயர் சியாரா ஸ்ட்ரான்பீல்ட். இவர் கருத்தரித்த சமயத்தில்., தனது 20 வாரத்தில் மருத்துவரிடம் சென்று சோதனை செய்துள்ளார். இந்த நேரத்தில் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு டிரிசோமி 18 அறிய வகை மரபணு நோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்., இந்த நோயின் காரணமாக குழந்தை பிறந்தாலும் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும்., இப்போது கருக்கலைப்பு செய்தால் பிரச்சனை இல்லை.. கருவை கலைத்துவிடலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சியாரா குழந்தையை சுமக்கவே விரும்புவதாக தெரிவித்த நிலையில்., கடந்த செப்டம்பர் மாதத்தின் போது குழந்தை பிறந்த சமயத்திலேயே சாமுவேல் லீ என்று பெயர் சூட்டிய ணியில்., குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கூட அனுபவிக்க இயலாமல் சுமார் 3 மணிநேரத்திற்கு உள்ளாகவே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தனது குழந்தைக்கு ஒரு வாய் தாய்ப்பால் கூட கொடுக்க இயலவில்லை என்று வருந்திய நிலையில்., தனது குழந்தையின் நினைவாக குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை 63 நாட்கள் தானம் செய்துள்ளார். தனது வாழ்நாளில் நடந்த துயரை நினைவில் வைத்து பிற குழந்தைக்கு தாயாக தாய்ப்பால் ஊட்டிய சியாராவின் தாய்மைக்கு பாராட்டுக்கள் தெரிவித்தாக வேண்டும்..
Tamil online news Today News in Tamil
English Summary
in america mother feed milk for babies since died baby thoughts