வீட்டிற்கு வெளியே நின்ற பெண்ணிற்கு துடிதுடிக்க அரங்கேறிய சோகம்... அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தில் காட்டுப்பன்றிகள் அதிகளவு வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில்., காட்டுப்பன்றிகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு சென்று மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 

இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில்., ஹஸ்டன் நகரில் இருக்கும் அநாஹீவாக் பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகளவு இருந்துள்ளது. மேலும்., இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரும் அளித்துள்ளனர்.

இது குறித்த புகார் தொடர்ந்து எழுந்ததை அடுத்து அதிகாரிகள் கூண்டுகள் அமைத்து காட்டுப்பன்றிகளை பிடிக்க முடிவு செய்து., அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில்., அங்குள்ள பகுதியில் வீட்டில் வேலைக்கார பெண்மணியாக ரோலின்ஸ் (வயது 59) என்ற பெண்மணி இருந்த நிலையில்., நேற்று முன்தினதன்று தான் பணியாற்றும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்துள்ளார். 

இந்த சமயத்தில்., காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்த நிலையில்., தனது இல்லத்திற்குள் விரைந்து செல்ல முயற்சித்துள்ளார். இவரை கண்ட காட்டுப்பன்றிகள் கூட்டமாக சேர்ந்து கடித்து குதறவே., சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america forest pig attack lady and died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->