வெள்ளத்தால் நிலைகுலைந்த பாலம்.. 3 குழந்தைகள், தாய் காரிலேயே துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.!!
In america flood bridge collapse 3 child and mother died
அமெரிக்கா நாட்டில் உள்ள இண்டியானா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையின் போது கடுமையான புயலொன்று தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு பல மைல்கள் வேகத்தில் புயல் காற்று வீசிய நிலையில், பேய் மழையும் கொட்டி தீர்த்துள்ளது.
இதன் காரணமாக அங்கிருக்கும் பல்வேறு நகரங்கள் அனைத்தும் வெள்ளக்காடால் சூழப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு போக்குவரத்து பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அங்குள்ள பிராங்க்ளின் நகரில் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில், பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்த இரண்டு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் மற்றும் பெண்ணொருவர் பலியான நிலையில், இவர்களின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இதனைப்போன்று வெள்ளத்தில் சிக்கிய மேலும் பலர் மாயமாகியுள்ளதால், அவர்கள் இறந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவர்களை தேடும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
In america flood bridge collapse 3 child and mother died