தற்கொலைப்படை தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 34 பேர் பரிதாப பலி..!!
in Afghanistan terrorist killed 34 peoples by suicide bomber
இந்த உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலானது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உலகில் உள்ள அணைத்து நாடுகளும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்க பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்னதான் பலவிதமான முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும்., சில சமயத்தில் எதிர்பாராத விதமாக மக்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் அதிபருக்கான தேர்தலும் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை பிரதமர் பதவிக்கு அம்ருல்லா சலோ என்பவரும் போட்டியிடுகிறார்.
இவர் காபூலில் இருக்கும் தனது அலுவலகத்தில் இருந்த சமயத்தில்., வெடிகுண்டுகளை நிரப்பிய வாகனமானது வந்து அரங்கேறிய தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். மேலும்., கட்டிடம் சேதமடைந்த நிலையில்., சுமார் 50 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., தற்போது மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவமானது ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஹெராத் - காந்தகார் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில்., பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவமானது மீண்டும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in Afghanistan terrorist killed 34 peoples by suicide bomber