ஹிஸ்புல்லா கொடூர ஏவுகணை தாக்குதல்!...இஸ்ரேலில் திக் திக் பதற்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான், காசா  மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அவ்வப்போது இஸ்ரேலை குறிவைத்தும் ஹிஸ்புல்லா அமைப்பினரை தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 165 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக இந்த ஏவுகணைகள் வடக்கு இஸ்ரேலின் ஹைபாவைத் தாக்கியதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hizbullah cruel missile attack tension in israel


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->