ஆஸ்திரேலியாவில் தொடர் கனமழையால் வெள்ளம்.! ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தென்கிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், விக்டோரியா மாகாணம் மற்றும் பெண்டிகோ நகர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் புகுந்ததால் கார் போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விக்டோரியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மேனியா தீவு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 120க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. வெள்ளத்தால் மின்தடை மற்றும் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rain lashes out Australia


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->