இஸ்ரேல் உடன் போர் நிறுத்தம் செய்ய அமெரிக்காவின் திட்டத்தை ஏற்க ஹமாஸ் ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு தீர்வு காண, அமெரிக்கா தயார் செய்துள்ள சமரசத் திட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை  ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.  அங்கு இஸ்ரேலில் புகுந்து நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான பேர் பிணைக்கதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தை தொடர்ந்து, பல அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார். பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து பிணைக் கைதிகளில் பெரும்பகுதியினரை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.

ஆனால், முழுமையாக விடுதலை செய்யவில்லை. அத்துடன், சிறிது காலம் போர் நிறுத்தம் செய்து காத்திருந்த இஸ்ரேல், மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக தினமும் ஏராளமான பேர் உயிரிழகின்றனர். இந்த  பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, அமெரிக்க அதிபரின் தூதர் விட்காப் சமரசத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன்படி, அவர் தயார் செய்துள்ள திட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தத் திட்டத்தை இஸ்ரேல் அரசு ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் அமலுக்கு வரவும், மீதமுள்ள பிணை கைதிகள் விடுதலை செய்யப்படவும் வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hamas agrees to accept US ceasefire plan with Israel


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->