முத்தம் கூடாது.. பேச கூடாது.. பின்ன எதுக்கு?.. கொதிக்கும் பாலியல் தொழிலாளர்கள்.!!
Greek Sex workers feeling sad about govt rules
கொரோனா வைரசால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், பாலியல் தொழிலாளர்களும் கடுமையான அளவு பாதிக்கப்பட்டனர். கிரேக்க நாட்டில் உள்ள மத்திய ஏதென்ஸ் நகரில் பாலியல் தொழில் விடுதிகள் மீண்டும் பரபரப்புடன் இயங்க துங்கியுள்ளது. இங்கு வெனிசுலா நாட்டினை சார்ந்த பலரும் பாலியல் தொழிலாளராக இருந்து வரும் நிலையில், கடந்த மூன்று மாதமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக நிம்மதி அடைந்துள்ள நிலையில், வாடிக்கையாளரின் வருகையால் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கிரேக்க அரசு பாலியல் தொழிலாளர்களுக்கான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் - பாலியல் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று இன்னும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகள் பாலியல் தொழிலாளர்களுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்களின் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த இயலாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்விசியம் தொடர்பாக கிரேக்க நாட்டின் பாலியல் தொழிலாளர் சங்க டிமித்திரா கூறுகையில், " கடந்த 3 மாதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட நபர்களுக்கு உணவு கூட சரிவர கிளைக்கவில்லை. இப்போது விதித்துள்ள கட்டுப்பாடுகள் கேலி செய்யும் வகையில் தான் இருக்கிறது. வடிக்கையாளருடன் கைகுலுள்ள கூடாது என்று பல இருக்கிறது. வடிக்கையாளருடன் அறைக்குள் சென்ற பின்னர் எல்லாம் நடக்கும். நேருக்கு நேர் தொடப்புக்கொள்ள கூடாதாம்? அது அப்படி முடியும் என்று எங்களுக்கு தெரியவில்லை.
வாடிக்கையாளர் படுக்கையறையில் முகக்கவசம் அணிந்து இருந்தால் எப்படி சந்தோசம் கிடைக்கும்?.. அரசின் பல உத்தரவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கிறது. எய்ட்ஸ் வந்த காலத்தில் காண்டம் உபயோகம் அவசியமானது. அதனை சமாளித்தோம். இப்போது விதிக்கப்பட்டுள்ள பல விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றும் வகையிலேயே இல்லை. அவர்களின் இஷ்டத்திற்கு அறிவித்துள்ளனர். பாலியல் தொழிலாளர்களின் பணியை அறிந்து அவர்கள் சில விதிமுறைகள் அறிவிக்க வேண்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Greek Sex workers feeling sad about govt rules