துற்செய்தி! இஸ்ரேல் நாட்டு மருத்துவமனை மீது ஈரான் கடுமையான ஏவுகணை தாக்குதல்...! - Seithipunal
Seithipunal


கடந்த 13-ந்தேதி, ஈரான் நாட்டில் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 % எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து இஸ்ரேல், ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தற்போது தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து 7 -வது நாளாக இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.மேலும், ஈரானிலுள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது.

அதைப்போலவே, இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.இந்த நிலையில், இஸ்ரேலிலுள்ள சொரோகா மருத்துவமனையின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மருத்துவமனையில் சில பகுதிகள் சேதமடைந்ததாக தற்போது இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இது சற்று வருத்தம் தரக்கூடிய விஷயமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news Iran launches a severe missile attack on an Israeli hospital


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->