ஜெர்மனியில் 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்! அதிர்ச்சியில் சுகாதாரத் துறை.!
Germany person covid vaccination
ஜெர்மனியில் முறைகேடாக கோரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜெர்மனியில் 61 வயதான முதியவர் ஒருவர் வெவ்வேறு கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இவர் அடிக்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டதை அறிந்த சுகாதார பணியாளர்கள் சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
புகாரின்பேரில் முதியவரை கைது செய்து, விசாரணை செய்ததில் அவர் இதுவரை 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது தெரியவந்தது.
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்காக அவர் போட்டுக்கொண்டதாக தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
English Summary
Germany person covid vaccination