வானத்தில் பரந்த 4 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் - இரண்டு வீரர்கள் பலி.!
four russia aircrafts shot down in ukraine border
வானத்தில் பரந்த 4 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் - இரண்டு வீரர்கள் பலி.!
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைன் நாட்டில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியது.
இந்த போருக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த போரில் இரு படைகளிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் எல்லை பகுதியை ஒட்டியுள்ள பிரையன்ஸ்க் பகுதியில் இரண்டு எம்.ஐ.-8 ரஷிய ஹெலிகாப்டர்கள், சு-35 போர் விமானம் மற்றும் சு-34 போர் விமானம் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜபோரிஜியா பகுதியின் அதிகாரியான விளாடிமிர் ரோகோவ் தெரிவித்ததாவது, "நான்கு ரஷிய விமானங்கள் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த போது சுடப்பட்டது. ஹெலிகாப்டர்கள் மற்றும் சு-34 விமானத்தில் இருந்த வீரர்கள் உயிரிழந்தனர்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
four russia aircrafts shot down in ukraine border